சட்டமன்றத் தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு!

 

சட்டமன்றத் தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதிரடியாக களம் இறங்கியுள்ளன. கருணாநிதி இல்லாமலும், ஜெயலலிதா இல்லாமலும் நடக்க உள்ள தேர்தல் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதிமுகவில் ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரு பிரிவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தேர்தல் நேரத்தில் சசிகலாவும் விடுதலையாக விருக்கிறார். இதனால் அதிமுகவில் தேர்தல் நேரத்தில் பெருங்குழப்பம் இருக்குமென அரசியல் விமர்சகர்கள் இருக்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு!

இது ஒரு புறமிருக்க பிற கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தேர்தலில் தணித்து களம் காணவிருப்பதாக சீமான் இன்று காலை அறிவித்தார். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். பாஜக வலுப்பெறுவதை திமுக கூட்டணியால் தான் தடுக்க முடியும் என்றும் புதிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.