திருமங்கலம் :தம்பியை கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் தலைமறைவு

 

திருமங்கலம் :தம்பியை கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் தலைமறைவு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சோழவந்தான் சாலையில் உள்ள செங்குளம் 11வது தெருவில் வசிப்பவர் மருதன். இவரது மகன்கள் தினேஷ்குமார்(27), பாண்டியராஜ். இவர்களில் தினேஷ்குமார் கல்லூரி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். பாண்டியராஜ் பொறியியல் கல்லூரி படிப்பை முடித்தவர். அண்ணன் தம்பி இருவரும் கஞ்சா, மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என்றும் கூறுகிறார்கள் அப்பகுதியினர்.

திருமங்கலம் :தம்பியை கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் தலைமறைவு

இந்நிலையில், தினேஷ்குமார் தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது அண்ணன் பாண்டியராஜ் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். தம்பி இறந்துவிட்டதும் பாண்டியராஜ் தலைமறைவாகிவிட்டார்.

திருமங்கலம் :தம்பியை கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் தலைமறைவு

தம்பியை அண்ணன் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பாண்டியராஜை தேடி வருகின்றனர்.

தம்பியை அண்ணனே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.