சென்னையில் கொரோனாவிலிருந்து மீண்டு 32 போலீசார் பணிக்கு திரும்பினர்!

 

சென்னையில் கொரோனாவிலிருந்து மீண்டு 32 போலீசார் பணிக்கு திரும்பினர்!

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா தொற்று பல உலக நாடுகளை கடந்த 8 மாதமாக படாதப்பாடு படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொற்று எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்துள்ளது.

சென்னையில் கொரோனாவிலிருந்து மீண்டு 32 போலீசார் பணிக்கு திரும்பினர்!

இருப்பினும் இந்த பேரிடர் காலகட்டத்திலும் முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிராக உழைத்து வருகிறார்கள்.

சென்னையில் கொரோனாவிலிருந்து மீண்டு 32 போலீசார் பணிக்கு திரும்பினர்!

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 போலீசார் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் பணிக்கு திரும்பிய போலீசாரை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உற்சாகமாக வரவேற்றார். இதுவரை தமிழகத்தில் 1850 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நிலையில் அதில் 1492 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.