ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

 

ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

வயிற்றுக்குள் ஏற்படும் சிராய்ப்புகள் புண்கள் மற்றும் குடலுக்கு ஏற்படும் புண்களை தான் நாம் அல்சர் என்று கூறுகிறோம். எப்படி நம் உடலுக்கு வெளியில் எதிலாவது மோதி கொண்டால் அல்லது ஏதாவது சிராய்ப்பு ஏற்பட்டால் நமக்கு காயம் ஏற்படுவது போல, குடலுக்குள் நாம் சாப்பிடும் உணவுகளால், அதில் உள்ள அதிக அமிலத்தன்மை , காரத்தன்மை , வயிற்றைப் புண்ணாக்கக் கூடிய சில உணவுப் பொருட்கள் உள்ளே சென்றால் அதன் மூலமாக அல்சர் உருவாகிறது.

ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

வயிற்றில் காயங்கள் தினமும் ஒரு நுண்ணிய அளவில் நாம் சாப்பிடும் ஒவ்வொரு பொருட்களின் மூலமும் ஏற்படும். இது நாம் சாப்பிடக் கூட உணவுகளின் மூலமாகவே சீர் செய்யப்படும். உதாரணமாக நாம் சாப்பிடும் உணவுகளின் பெரும்பாலான இடங்களில் கடைசியாக மோர் கொடுப்பார்கள். மோர் சோறு என்ன செய்யுமென்றால் இயல்பாக வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி ஆறவைக்கும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றக் கூடிய தன்மை மோருக்கு உள்ளது. அமிலத்தன்மையால் புண் ஏற்படும் பட்சத்தில் அந்த அமிலத் தன்மையின் வீரியத்தை குறைக்கும் சத்தும் மோருக்கு உள்ளது.

ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

பெரும்பாலான மக்கள் ஹோட்டலுக்கு சென்றால் முதலில் சூப் சாப்பிடுவார்கள். சூப் என்பது மேற்கத்திய உணவு. வணிகம் உள்ளிட்ட சில விஷயங்களை பேசுவதற்காக செல்லும் நபர்கள் ஹோட்டலில் பசியைத் தூண்டுவதற்கு சூப் சாப்பிடுவார்கள். ஆனால் நம்மில் பலர் அதீத பசியில் ஹோட்டலுக்கு சென்று நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் சூப் சாப்பிடுகிறோம். ஏற்கனவே வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாக சுரந்து கூடுதல் பசியை ஏற்படுத்தி புண் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மேலாக சூப் சாப்பிடும் போது வயிற்றில் உள்ள புண் இன்னும் அதிகமாகும். எனவே அதீத பசியில் இருக்கும் போது காரம் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

அஜீரணத்தை அலட்சியப்படுத்தும் போது அது வயிற்று புண்ணாக மாறி விடுகிறது. அதிக அளவில் காரம், மிளகாய் வத்தல் போன்றவற்றை எடுக்கும்போது குடலின் உட்பகுதிகளிலும் , வயிற்றின் உட்பகுதிகளில் உள்ள சளி படலத்தில் சில புண்கள் உருவாகும். அது சரியாக ஆற்றபடவில்லை என்றால் நாள்பட நாள்பட அது புண்களாக மாறி, இரைப்பையில் ஓட்டை ஏற்படக் கூடிய அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட இந்த புண்கள் ஆறாமல் , அது மரபு வழியாக புற்று நோய் இருப்பதற்கான சூழல் இருக்கும் பட்சத்தில் புற்றுநோயாகவும் மாறக்கூடும். அதனால் வயிற்றுப்புண்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது . அது வராமல் இருக்க கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

உணவு பழக்கங்களை தாண்டி சிலர் உடல் மெலிய வேண்டும் என்று சாப்பிடாமல் கிடப்பார்கள், மன அழுத்தம், வலி மாத்திரைகள் உட்கொள்வது, புகைப்பிடித்தல் மது அருந்துதல் மூலம் வயிற்றுப் புண் வரும். இதனால் வயிற்று புண்ணை குணமாக்க, அன்றாட உணவுகளில் வாழைப்பழம் மற்றும் மோரை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் புண்களை ஆற்றக் கூடிய இயல்பான குணம் கொண்டவை.

ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

அதேபோல் காலை உணவில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் பால் ஆப்பம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் . ஆவியில் வெந்த பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்று புண் விரைவில் ஆறிவிடும். அதிக அளவு மோர் சோறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும். இவையெல்லாம் வயிற்றுப்புண்களை வரவிடாமல் தடுக்க உதவும்.

ஒரே வாரத்தில் அல்சர் குணமாக… இதை சாப்பிடுங்க!

ஒருவேளை உங்களுக்கு வயிற்றுப்புண் என்று சொல்லப்படும் அல்சர் வந்துவிட்டால் நீங்கள் பயப்படத் தேவையில்லைஉங்கள் மருத்துவரை அணுகி அதை குணமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக வயிற்றுப்புண் உள்ளவர்கள், பிரண்டை துவையலை அன்றாடம் சாப்பிடும் போது வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். அல்சர் உள்ளவர்களுடன் நீங்கள் ஆலோசித்துப் பார்த்தால் அவர்கள் மன பதட்டம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என எப்போதும் பரபரப்பாக இயங்க கூடியவர்களுக்கு அதிகம் வயிற்றுப் புண் இருக்கும். இதனால் மனதை பக்குவப்படுத்தி, ஆற்றுப்படுத்தி, நிதானமாக இருக்க வேண்டும். இத்துடன் சேர்த்து சரியான மூச்சுப்பயிற்சி , தியானப்பயிற்சி சரியான அளவில் தூக்கம் என இருந்தால் விரைவில் வயிற்றுப்புண் இருந்து விடுபடலாம்