‘பலசரக்கு கடையில் திருட்டு’ சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை சேர்த்து திருடிச் சென்ற பலே திருடர்கள்!

 

‘பலசரக்கு கடையில் திருட்டு’ சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை சேர்த்து திருடிச் சென்ற பலே திருடர்கள்!

நெல்லை அருகே கடை ஒன்றில் திருடிச் சென்ற கொள்ளையர்கள், மாட்டிக் கொள்ளாமல் இருக்க கேமரா ஹார்டு டிஸ்க்கையும் சேர்த்து திருடிச் சென்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம், பனங்குடி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், ஆரல்வாய்மொழி பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு ஐயப்பன் வீட்டுக்கு செல்வதை, நோட்டமிட்டுக் கொண்டிருந்த கொள்ளையர்கள் நேற்று முன்தினம் இரவு கைவரிசையை காட்டியுள்ளனர்.

‘பலசரக்கு கடையில் திருட்டு’ சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை சேர்த்து திருடிச் சென்ற பலே திருடர்கள்!

மறுநாள் காலை கடையை திறக்கச் சென்ற ஐயப்பன், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கடையின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது, கல்லா பெட்டியில் இருந்து ரூ.15 ஆயிரம் பணமும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் அவருக்கு தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்த கொள்ளையர்கள் கடையில் இருந்து சிசிடிவி கேமராவுடன் சேர்த்து அதன் ஹார்டு டிஸ்க்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

‘பலசரக்கு கடையில் திருட்டு’ சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை சேர்த்து திருடிச் சென்ற பலே திருடர்கள்!

சிசிடிவி கேமரா மூலமாக மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டு அதனை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஐயப்பன் ஆரல்வாய்மொழி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஐயப்பன் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.