ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ள 2 இந்தியர்கள் இவர்கள்தாம்!

 

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ள 2 இந்தியர்கள் இவர்கள்தாம்!

அமெரிக்காவில் இம்மாதம் 3-ம் தேதி அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பெரும் இழுபறியாக இருந்து வந்த தேர்தல் முடிவில் ஜோ பைடன் பெருவாரியான வெற்றி பெற்றி 306 வாக்குகளைப் பெற்றார். அதிபராகும் மெஜாரிட்டி வாக்குகள் 270 –தான். ஆயினும் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடுவதும், ட்விட்டரில் பதிவிடும் தொடர்கதையாகி வருகிறது. தேர்தலில் முறைகேடு நடக்க வில்லை என்று சொன்ன அதிகாரியை டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு கோபத்தில் மூழ்கியிருக்கிறார்.

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ள 2 இந்தியர்கள் இவர்கள்தாம்!

ஆனால், மறுபக்கம் ஜோ பைடன் அடுத்த ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அமெரிக்காவின் பெரும் துயரம் கொரோனா பரவல்தான். அதைக் கட்டுப்படுத்த மருத்துவக்குழு ஒன்றை அமைத்திருக்கிறார். மேலும், அதிகாரத்தை ட்ரம்ப் வசமிடருந்து கைமாற்றவும் குழுக்கள் அமைத்திருக்கிறார். இந்தக் குழுக்களில் இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது தெரிந்த செய்தியே.

தற்போது ஜோ பைடன் அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் இரண்டு இந்தியர்கள் இடம்பிடிப்பார்கள் என்று தெரிகிறது.

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ள 2 இந்தியர்கள் இவர்கள்தாம்!

ஒருவர் விவேக் மூர்த்தி. கர்நாடக மாநிலத்தைப் பூர்விகமாக கொண்ட இவர், தற்போது ஜோ பைடனில் கொரோனா ஆலோசனை குழுவில் துணை தலைவராக உள்ளார். இவருக்கு சுகாதாரம் தொடர்பான இலாகா ஒதுக்கப்படலாம் என்று பேச்சு உலாவுகிறது.

மற்றொருவர் பேராசிரியர் அருண் மஜூம்தார். இவர் ஸ்டான்ஃபோர்ட்  யுனிவர்சிட்டியில் பேராசியராக உள்ளார். இவருக்கும் ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்படக்கூடும் என எதிர்பார்ப்பு இருக்கிறது.