சென்னையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இல்லை!

 

சென்னையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி  இல்லை!

வழக்கமாக பொதுத் தேர்வு முடிந்து ஓரிரு நாட்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி விடும். ஆனால் இந்த முறை கடந்த மார்ச் 24 ஆம் தேதியே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சென்னையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி  இல்லை!

தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் விடைத்தாள்கள் வந்துள்ளன. ஆனால் சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், சென்னையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியை நடத்தாமல் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது. அதன் படி விடைத்தாள்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.