ஒருவர், இருவருக்கு கொரோனா வந்தால் அரசு அலுவலகத்தை மூட வேண்டியது இல்லை! – வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு

 

ஒருவர், இருவருக்கு கொரோனா வந்தால் அரசு அலுவலகத்தை மூட வேண்டியது இல்லை! – வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அரசு அலுவலகங்கள் குறைந்த அளவில் பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிலும் சில இடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மொத்த அலுவலகமும் மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அரசு அலுவலகங்கள் செயல்படுவது தொடர்பாக வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஒருவர், இருவருக்கு கொரோனா வந்தால் அரசு அலுவலகத்தை மூட வேண்டியது இல்லை! – வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அந்த அரசாணையில், “65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
2. எச்சில் துப்புவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
3. பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
4. அனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் சோதனை கருவி பரிசோதனை, கிருமி நாசினி பயன்படுத்திய செய்த பின்னரே பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
5. ஆலோசனைக் கூட்டங்களை (மீட்டிங்) நேரடியாக நடத்தாமல் வீடியோ கான்பரசிங் மூலமாக நடத்த வேண்டும்.
6. எந்தவித அறிகுறியும் இல்லாத பணியாளர்கள் / பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
7. நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வரும் பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது. வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கலாம்.
8. ஒரு பணியாளர் அல்லது இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை. கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தபின் பணியைத் தொடரலாம்.
9. அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கிருமிநாசினி தெளித்த பின் 2 நாட்களுக்கு அலுவலகத்தை மூட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.