சட்ட பேரவை தேர்தலில் தனித்து போட்டி : சீமான் அறிவிப்பு!

 

சட்ட பேரவை தேர்தலில் தனித்து போட்டி : சீமான் அறிவிப்பு!

சட்ட பேரவை தேர்தலில் தனித்து களம் காண உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

சட்ட பேரவை தேர்தலில் தனித்து போட்டி : சீமான் அறிவிப்பு!

திலீபன் 33ஆம் ஆண்டு நினைவுநாளில் கலந்து கொண்ட சீமான் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வருகின்ற சட்டபேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.

சட்ட பேரவை தேர்தலில் தனித்து போட்டி : சீமான் அறிவிப்பு!

சட்ட பேரவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் நீண்ட நாட்களாக ஆட்சி மாற்றத்தை வேண்டும் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.