ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பதில் புதிதாக முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது! – ஏர் இந்தியா அறிவிப்பு

 

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பதில் புதிதாக முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது! – ஏர் இந்தியா அறிவிப்பு

கொரோனா காரணமாக முன்பதிவு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமான டிக்கெட்களுக்கு கட்டணம் எதுவும் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பதில் புதிதாக முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது! – ஏர் இந்தியா அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மார்ச் 24ம் தேதி தொடங்கி மே இறுதி வரை விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்த மாதங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 31ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படாமல் மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மே 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இயக்கப்பட உள்ள ஏர் இந்தியா விமானங்களில் இவர்கள் பயணம் மேற்கொள்ளலாம். ஒருவேளை வேறு இடத்துக்கு பயணிக்க விரும்பினால் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.