வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கப் பதக்கமா?… வெளியாகும் பரபரப்பு தகவல்!

 

வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கப் பதக்கமா?… வெளியாகும் பரபரப்பு தகவல்!

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் மீராபாய் சானு. 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். பளுதூக்குதலில் 87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க் தூக்கி 4 பிரிவுகளில் அசத்தி வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கப் பதக்கமா?… வெளியாகும் பரபரப்பு தகவல்!

ஒலிம்பிக் பதக்கம்வெல்ல வேண்டும் என்ற தனது கனவு நனவாகி இருப்பதாக மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மீராபாய் சானு, வெற்றியினை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார். மீராபாய் சானுவின் வெற்றியை தங்களது வெற்றியாகக் கருதி இந்திய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்த சீன வீராங்கனை ஹோ ஸீகுய்குய்க்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்படுகிறது. அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்த மீராபாய்க்கு கொடுக்கப்படும். சீன வீராங்கனைக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.