சென்னை மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக தீரனிராஜன் நியமனம்!

 

சென்னை மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக தீரனிராஜன் நியமனம்!

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் என்று 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர்கள் எல்லோரும்  அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்திக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவருக்கு பதிலாக சென்னை மருத்துவக் கல்லூரி ஹெபடாலஜி பிரிவு இயக்குனரும், பேராசிரியருமான நாராயணசாமி டீன் தற்காலிகமாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக தீரனிராஜன் நியமனம்!

இந்நிலையில் பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி டீன் தீரனிராஜன் தற்போது கரூர் மருத்துவக்கல்லூரியில் மாற்று பணியில் உள்ளார், அவர் தற்போது சென்னை மருத்துவ கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.