தென்காசி விவசாயி முத்துவின் உடல் மறுபிரேத பரிசோதனை தொடங்கியது!

 

தென்காசி விவசாயி முத்துவின் உடல் மறுபிரேத பரிசோதனை தொடங்கியது!

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்த அணைக்கரைமுத்து (76) என்பவர், தன் தோட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவரை விசாரிக்க கடையம் வன சரக அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது முத்து மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்த சம்மதித்ததாக தெரிகிறது. விசாரணையின் போது முத்து அதிகாரிகளிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் அங்கு உயிரிழந்தார்.

தென்காசி விவசாயி முத்துவின் உடல் மறுபிரேத பரிசோதனை தொடங்கியது!

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர். இதனிடையே முத்து மரண விவகாரத்தில் மூத்த தடயவியல் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்யக்கோரி முத்துவின் மனைவி பாலம்மாள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், 2 தடய அறிவியல் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பேராசிரியர் அடங்கிய குழு முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். அதன் படி இன்று விவசாயி முத்துவின் உடல் மறுபிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது. முத்துவின் உடல் ஏற்கனவே விதியை மீறி இரவில் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.