மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – விவசாயிகள் மகிழ்ச்சி

 

மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி

தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – விவசாயிகள் மகிழ்ச்சி

குறிப்பாக ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருஷநாடு, சதுரகிரி, வெள்ளிமலை, மேகமலை, சுருளி மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த இடியுடன், கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள மூல வைகை ஆற்றில், நீண்ட மாதங்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூல வைகையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.