கொரோனாவால் முடக்கப்பட்ட சின்னமனூர்!

 

கொரோனாவால் முடக்கப்பட்ட சின்னமனூர்!

சின்னமனூர் சார்பு ஆய்வாளருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு காவல் நிலையம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, சின்னமனூர் நகராட்சியினர் காவல்நிலையத்தை அடைத்தனர். இதனையடுத்து இந்த காவல் நிலையம் சின்னமனூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தற்போது காவல் நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது.மேலும் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளருக்கு கொரொனோ தொற்று உறுதியானதையடுத்து அப்பபகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனாவால் முடக்கப்பட்ட சின்னமனூர்!

சின்னமனூரில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இனி அனுமதி இல்லை. பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 27 ஆம் தேதி வரை நகைக் கடைகள் அடைக்கப்படுகின்றன.