பெரியகுளத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

 

பெரியகுளத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குற்றச்செயல்களை தடுக்கவும், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் உடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாகவும், மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கலந்துகொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பெரியகுளத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

இந்த ஊர்வலத்தில் பயிற்சி துணை எஸ்.பி. அருண் கபிலன், கூடுதல் எஸ்.பி-க்கள் ராஜேந்திரன், சங்கரன் ஆகியோரும் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதி டிஎஸ்பி-க்கள், மற்றும் பல்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று டிஎஸ்பி அலுவலகத்தில் நிறைவடைந்தது.