தேனியில் புதிதாக 233 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த பாதிப்பு 3,789 ஆக அதிகரிப்பு!

 

தேனியில் புதிதாக 233 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த பாதிப்பு  3,789 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தேனியில் புதிதாக 233 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த பாதிப்பு  3,789 ஆக அதிகரிப்பு!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

தேனியில் புதிதாக 233 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த பாதிப்பு  3,789 ஆக அதிகரிப்பு!

இந்த நிலையில் தேனி மாவட்ட கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் புதிதாக 233 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3789 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.