தேனியில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா; புதுக்கோட்டையிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

 

தேனியில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா; புதுக்கோட்டையிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,875 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்து 1951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், மதுரை, தேனி, நெல்லை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கொரோனா வேகமெடுத்து வருகிறது.

தேனியில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா; புதுக்கோட்டையிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் தேனி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் மேலும் 308 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,972 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 3,180 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,724 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,475 ஆக அதிகரித்துள்ளது.