சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதல்- பெண் உள்பட இருவர் பலி!

 

சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதல்- பெண் உள்பட இருவர் பலி!

தேனி

தேனி அருகே சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது, ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் சீப்பாலகோட்டை அடுத்த கள்ளப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (74). உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜாவை, சிகிச்சைக்காக, நேற்று தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்சில், அவரது மனைவி செல்வி, மகன் செல்வகுமாரும் உடன் சென்றனர். ஆம்புலன்ஸை சின்ன ராமகவுண்டன்பட்டியை சேர்ந்த பிரனேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதல்- பெண் உள்பட இருவர் பலி!

சீலையம்பட்டி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், நெடுஞ்சாலை ஒரம் நின்றிருந்த லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் சாலையில் நடந்துசென்ற குருசாமி மற்றும் வேனில் இருந்த செல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ராஜா, செல்வகுமாரும் பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரனேஷை கைது செய்தனர்.