பயம் இல்லாமல் திருட சரக்கு அடித்த புதுத்திருடன்! வீட்டுக்குள் புகுந்ததும் போதை தலைக்கேறி தூங்கியதால்…?

 

பயம் இல்லாமல் திருட சரக்கு அடித்த புதுத்திருடன்! வீட்டுக்குள் புகுந்ததும் போதை தலைக்கேறி தூங்கியதால்…?

கொரோனா ஊரடங்கில் உணவுசம்பந்தப்பட்ட தொழில் மட்டும் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. சாலையில் யாருமே நடமாட அனுமதி இல்லாத போதும், உணவு டெலிவரி செய்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் மட்டும் வேலை செய்து பிழைத்து வந்தார்கள்.

பயம் இல்லாமல் திருட சரக்கு அடித்த புதுத்திருடன்! வீட்டுக்குள் புகுந்ததும் போதை தலைக்கேறி தூங்கியதால்…?

அப்படி இருந்தும், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அல்லாடியிருக்கிறார் பொறியியல் பட்டதாரி முத்தழகன். கொளத்தூரைச் சேர்ந்த இவர், உணவு டெலிவரி செய்யும் வேலையில் போதிய பணம் வராததால், வீடு புகுந்து கொள்ளையடித்தாவது கடனை அடைக்கலாமா என்று யோசித்திருக்கிறார்.
அப்போது அடையாளம்பட்டு பகுதியில் உணவு டெலிவரி செய்ய போனபோது, ஒரு தனியாக இருப்பதை நோட்டமிட்டிருக்கிறார்.

இரவில் அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கலாம் என்று வந்தவர், முதன் முதலாக திருடபோவதால் பயம் இல்லாமல் திருட, சரக்கு அடித்திருக்கிறார். ஆனால், காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து மொட்டை மாடிக்கு தாவி ஏறியிருக்கிறார். ஆனால், மொட்டை மாடியில் இருந்த கதவை திறக்க முடியாததால், அக்கதவு திறந்ததும் கொள்ளையடிக்கலாம் என்று இருட்டில் உட்கார்ந்தவருக்கு, போதை தலைக்கேறிவிட்டது. அப்படியே தூங்கிவிட்டார்.

பயம் இல்லாமல் திருட சரக்கு அடித்த புதுத்திருடன்! வீட்டுக்குள் புகுந்ததும் போதை தலைக்கேறி தூங்கியதால்…?

பொழுது விடிந்து, வெயில் சுள்ளென அடித்தபோதும், தூக்கம் கலையாமல் படுத்துக்கிடந்தவரை வீட்டுக்காரர் வந்து எழுப்பி விட்டதும், தப்பியோட முயன்று சிக்கிவிட்டார். மதுரவாயல் போலீசில் அவரை ஒப்படைத்ததால் விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.