வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி பதிவு வெளியீடு…

 

வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி பதிவு வெளியீடு…

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வீட்டின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஊசிதெருவில் வசித்து வருபவர் பொறியாளர் பஜல் மஹமூத். இன்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற மஹமூத், பின்னர் வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது.

வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி பதிவு வெளியீடு…

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தார். அப்போது, ஹெல்மட் அணிந்து வந்த மர்மநபர்கள் இருவர், வாகனத்தை லாவகமாக திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, பஜல் மகமூத் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே மர்மநபர்கள் வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானதால், அதனை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.