விபதி பூசி கொள்ளையடித்து சென்ற ஆசாமிகள்!

 

விபதி பூசி கொள்ளையடித்து சென்ற ஆசாமிகள்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போலி மந்திரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கமுதி அருகே விரதகுளம் கிராமத்திற்கு சென்ற 6 பேர் கொண்ட போலி மந்திரவாதிகள் ஒவ்வொரு குடும்பங்களாக சென்று தங்களது வீட்டில் செய்வினை, மை மாந்திரம் செய்து வைத்ததாக கூறி வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தண்ணீரில் குலைத்த விபூதியை வீசி விட்டு அவர்களிடம் இருந்து ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பறித்து சென்று விட்டனர்.

விபதி பூசி கொள்ளையடித்து சென்ற ஆசாமிகள்!

விபூதியில் போதைப்பொருள் போன்ற ஒருவகை பொருளை சேர்த்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஆசாமிகள் சென்ற பத்து நிமிடங்கள் கழித்து சுய நிலையை அடைந்து கிராம மக்கள், கொள்ளையர்களை விரட்டி பிடித்து அபிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த காவல்துறையினர், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவர்கள் கொள்ளையடித்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.