கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் -இல் ரூ.13 லட்சம் கொள்ளை!

 

கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் -இல் ரூ.13 லட்சம் கொள்ளை!

மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ரூ.13 லட்சம் திருடி சென்ற நபருக்கு போலீசார் வலைவீசிவருகின்றனர்.

எம். எம். டி. ஏ காலனி பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. ஏடிஎம் மையத்தின் காவலாளி வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். மையத்திற்குள் ஒருவர் பணம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் பையுடன் வந்த மர்ம நபர் ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கூறி மையத்திற்குள் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டிருந்தவர் ஓரமாக நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தில் சாவியை போட்டு அதிலிருந்த பணத்தை திருடி கொண்டு ஆட்டோவில் ஏறி சென்று விட்டார்.

கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் -இல் ரூ.13 லட்சம் கொள்ளை!

இதையடுத்து அருகில் நின்றுக்கொண்டிருந்த நபர் காவலாளியிடம் வந்த நபர் பை நிறைய பணம் எடுத்து செல்வதாகவும் வங்கி ஊழியர் என தான் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவலாளி வங்கி மானேஜருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மதுரவாயல் போலீசார் ஏடிஎம் அறையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த காட்சிகளை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.13 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.