அக்.1 முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி

 

அக்.1 முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி

அக். 1 முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அக்.1 முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்காளத்தில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. 50 பார்வையாளர்கள் அல்லது அதற்கும் குறைவானவர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தியேட்டர்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு வழிமுறைகளுடன் திரையரங்குகளுக்கு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அக்.1 முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி

அத்துடன் தியேட்டர்கள் மட்டுமின்றி நாடகங்கள், அனைத்து இசை, நடனம் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகள் போன்றவையும் குறைந்த பார்வையாளர்களுடன் இயங்கலாம் என அவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் திரையுலகினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விரைவில் தியேட்டர்கள் திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது மேற்கு வங்காளத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.