“தியேட்டர்களை விரைவில் திறக்க வேண்டும்” – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

 

“தியேட்டர்களை விரைவில் திறக்க வேண்டும்” – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

தமிழகத்தில் விரைவில் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

“தியேட்டர்களை விரைவில் திறக்க வேண்டும்” – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

நாடு முழுவதும் மீண்டும் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டது. இதை தொடர்ந்து ஐபிஎல், உலகக் கோப்பை, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 15 ஆம் தேதி மீண்டும் நடக்கும் கூட்டத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்த உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

“தியேட்டர்களை விரைவில் திறக்க வேண்டும்” – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழகத்தில் தியேட்டர்களை உடனே திறக்க கோரி மனு அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் திரையரங்குகளை உடனே திறந்தால்தான் அதை நம்பியுள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், தங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.