முதல்வருடன் தியேட்டர் உரிமையாளர்கள் இன்று சந்திப்பு!

 

முதல்வருடன் தியேட்டர் உரிமையாளர்கள் இன்று சந்திப்பு!

முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசுகின்றனர்.

ஆயுத பூஜைக்கு தமிழகத்தில் தியேட்டர்களில் திறக்க அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வருடன் தியேட்டர் உரிமையாளர்கள் இன்று சந்திப்பு!

அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வரை இன்று காலை சந்திக்கின்றனர்.

முதல்வருடன் தியேட்டர் உரிமையாளர்கள் இன்று சந்திப்பு!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டிருந்தன. இருப்பினும் ஊரடங்கு தளர்வால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் தமிழகத்தில் இன்னும் தியேட்டர் திறப்புக்கான எந்தா முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி வந்தார் .தற்போது இதன் எதிரொலியாக முதல்வர் தியேட்டர் திறப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

முதல்வருடன் தியேட்டர் உரிமையாளர்கள் இன்று சந்திப்பு!

குறைந்த எண்ணிக்கை ரசிகர்களுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.