” ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார் ” படக்குழு பின்வாங்கியதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

 

” ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார் ” படக்குழு பின்வாங்கியதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி  முடிவு!

சிம்புவின் ஈஸ்வரன் பட வெளியீடு பணிகளை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

” ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார் ” படக்குழு பின்வாங்கியதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி  முடிவு!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் இசையமைத்துள்ளார்.

” ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார் ” படக்குழு பின்வாங்கியதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி  முடிவு!

இந்நிலையில் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார் என்று திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், ஓடிடியில் வெளியாகாது என தயாரிப்பாளர் நேரில் சந்தித்து உறுதியளித்ததால் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் ஈஸ்வரன் வெளியாகும் என முதலில் அறிவித்த நிலையில், திரையரங்குகளில் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிடப் போவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படக்குழு பின்வாங்கியுள்ளது.

அதே சமயம் சிம்புவின் ஈஸ்வரன் பட வெளியீடு பணிகளை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும் என்று கியூப் சினிமா நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் தரப்பில் கியூப் நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால் படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.