சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!!

 

சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!!

ஊத்தங்கரை அடுத்த, அத்திப்பாடி ஊராட்சிக்குட்பட்ட, இளவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சம்பத் இவரது மகன் வேடியப்பன்(23,) ஒருதலையாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம், இளவம்பாடி கிராமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்து,சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பெண், தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து வேடியப்பனை தேடி வந்தனர், இந்நிலையில் நேற்று அவரை கைது செய்த சிங்காரபேட்டை போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.