இளைஞர்கள் வேலை வாய்ப்பு, பிரகாசமான எதிர்காலத்தை கேட்கின்றனர். வாய் திறக்க மறுக்கும் மோடி.. ராகுல் காந்தி

 

இளைஞர்கள் வேலை வாய்ப்பு, பிரகாசமான எதிர்காலத்தை கேட்கின்றனர். வாய் திறக்க மறுக்கும் மோடி.. ராகுல் காந்தி

இளைஞர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை கேட்கின்றனர் ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில், மோடி ஜி தனது சில நண்பர்களை மட்டுமே கேட்டு அவர்களை வளர்த்து கொள்கிறார். இன்று நாட்டின் இளைஞர்கள் தங்கள் உரிமைக்காக வேலைவாய்ப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலம் கோருகின்றன. ஆனால் மோடி ஜி அமைதியாக இருக்கிறார். இளைஞர்கள் பிரச்சினைகளை புறக்கணிக்கப்படுகின்றன என பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன் அவர் பேசிய வீடியோ ஒன்றையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இளைஞர்கள் வேலை வாய்ப்பு, பிரகாசமான எதிர்காலத்தை கேட்கின்றனர். வாய் திறக்க மறுக்கும் மோடி.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த டிவிட்டுக்கு முன்னதாக ராகுல் காந்தி மற்றொரு டிவிட்டரில், மோடி அரசாங்கத்தின் கொள்கைகள், கோடிக்கணக்கான வேலைகள் இழப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கியுள்ளது. அவர்களின் குரலை அரசாங்கத்தை கேட்க வைப்போம். காலை 10 மணி முதல் வேலைகளுக்காக பேசுவதற்கு சேரவும் என பதிவு செய்து இருந்தார். மேலும் லாக்டவுன் தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இளைஞர்கள் வேலை வாய்ப்பு, பிரகாசமான எதிர்காலத்தை கேட்கின்றனர். வாய் திறக்க மறுக்கும் மோடி.. ராகுல் காந்தி
பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லாக்டவுன், வேலையின்மை, எல்லை பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மோடி அரசை டிவிட்டரில் தொடர்ந்து கடுமையாக தாக்கி வருகிறார். மேலும் பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இது மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.