சிபிசிஐடி ஆபீஸ் அருகிலேயே ஹைடெக் விபச்சாரம்… சிக்கிய இளம்பெண்கள்!- நாகர்கோவிலை அதிரவைக்கும் பாலியல் தொழில்

 

சிபிசிஐடி ஆபீஸ் அருகிலேயே ஹைடெக் விபச்சாரம்… சிக்கிய இளம்பெண்கள்!- நாகர்கோவிலை அதிரவைக்கும் பாலியல் தொழில்

நாகர்கோவிலில் சிபிசிஐடி அலுவலகத்திலேயே ஹைடெக் விபச்சாரம் நடந்து வந்துள்ளது. வெளிமாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்களை வைத்த ஒரு கும்பல் பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை இறங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் ராமன்புதூர் சிபிசிஜடி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் அருகே உள்ள தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வெளியூர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட குமரி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 4 இளைஞர்களையும், வெளிமாவட்டத்தை சேர்ந்த 3 பெண்களையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2 மாதங்களாக சேலம், நாகப்பட்டிணம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளம் பெண்களை குமரிக்கு வர வழைத்து அவர்களின் புகைப்படங்களை கஸ்டமருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பெண்களை அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், ஊரடங்கு காலம் என்பதால் அவர்களே டூவிலரில் வெளியூர் சென்று இளம் பெண்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஜோசப் ஜெபிஸ், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த மகேஷ், வள்ளியூர் பகுதியை சேர்ந்த மகேஷ் ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த கும்பல் மாநிலம் முழுவதும் பாலியல் தொழிலை நடத்தி வருவரும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் இவர்களை பிடிக்க தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.