பாலத்தில் நின்றிருந்த நாயை ஆற்றுக்குள் தூக்கி வீசிய இளைஞர்! வைரலாகும் வீடியோவால் வலுக்கும் கண்டனங்கள்

 

பாலத்தில் நின்றிருந்த நாயை ஆற்றுக்குள் தூக்கி வீசிய இளைஞர்! வைரலாகும் வீடியோவால் வலுக்கும் கண்டனங்கள்

மூன்றாவது மாடியில் இருந்து நாயை தூக்கி எரிந்து அதை வீடியோ எடுத்து வெளியிட்ட சென்னை மாதாகல்லூரி மருத்துவ மாணவரின் கொடூரச்செயல் கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாலத்தின் மேல் நின்றிருந்த நாயை ஆற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு சிரித்து கொண்டாடும் போபால் இளைஞர்களின் வீடியோ வைரலாகி அதிர வைக்கிறது.

பாலத்தில் நின்றிருந்த நாயை ஆற்றுக்குள் தூக்கி வீசிய இளைஞர்! வைரலாகும் வீடியோவால் வலுக்கும் கண்டனங்கள்

போபால் அடுத்த படா தலாப் இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தின் மேல் இரண்டு நாய்கள் நிற்கின்றன. அந்த வழியாக செல்லும் இளைஞர்களில் ஒருவர், அந்த நாய்கள் அருகே சென்று அதில் ஒரு நாயை அலேக்காக தூக்குகிறார். அந்த இளைஞரின் குரூர மனதை அறியாமல், பாசத்தினால் அவர் தூக்குவதாக நினைத்த அந்த நாய் வாலாட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த குரூர இளைஞர், திடீரென அந்த நாயை ஆற்றுக்குள் வீசிவிட்டு, சிரிக்கிறார். அவருடன் வந்த இளைஞரும் பதிலுக்கு சிரிக்கிறார்.

பாலத்தில் நின்றிருந்த நாயை ஆற்றுக்குள் தூக்கி வீசிய இளைஞர்! வைரலாகும் வீடியோவால் வலுக்கும் கண்டனங்கள்

மனிதாபிமானமற்ற, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அந்த இளைஞர்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவினால் பலரும் கொதித்துப்போய், போலீசில் புகார் அளித்து வந்த நிலையில், நாயை ஆற்றுக்குள் வீசிய அந்த நபரை தேடி, விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

வாயில்லா ஜீவன்களை வாட்டி வதைக்கும் இது போன்றோருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே மனிதாபிமானம் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.