4வயது சிறுமியை ஜீன்ஸ் தொழிற்சாலைக்குள் தூக்கிச்சென்ற இளைஞர்

 

4வயது சிறுமியை ஜீன்ஸ் தொழிற்சாலைக்குள் தூக்கிச்சென்ற இளைஞர்

விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அப்பகுதியினர் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

4வயது சிறுமியை ஜீன்ஸ் தொழிற்சாலைக்குள் தூக்கிச்சென்ற இளைஞர்

டெல்லி பாபா நகரில் ஜீன்ஸ் உற்பத்தித் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகே இருக்கும் வீட்டில் உள்ள 4 வயது பெண் குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு இளைஞர் ஒருவர் அந்த சிறுமியிடம் சென்று, சாக்லேட் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அந்த பெண் சிறுமியும் அந்த இளைஞரின் பின்னால் சென்று இருக்கிறது. ஆனால் அவர் சாக்லேட் வாங்கித்தர கடைக்கு அழைத்துச்செல்லாமல், ஜீன்ஸ் தொழிற்சாலைக்குள் தூக்கிச் சென்றிருக்கிறார்.

ஜீன்ஸ் தொழிற்சாலைக்குள் இருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்ததை சொல்லியிருக்கிறது அந்த சிறுமி. யார் இதைச் செய்தது என்று கேட்டிருக்கிறார்கள் பெற்றோர். அதற்கு தொழிற்சாலையில் உள்ள இளைஞரை காட்டியதும், 4 வயது சிறுமியை இப்படி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறானே என்கிற ஆத்திரத்தில் அப்பகுதியினர் திரண்டு சென்று வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை பிடித்து இழுத்து வந்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்திருக்கின்றனர்.