பாட்டியை ஏமாற்றி வாடகை வீட்டையே சொந்தமாக்கிய வாலிபர்! தற்போது சிறையில் வசிக்கிறார்!

 

பாட்டியை ஏமாற்றி வாடகை வீட்டையே சொந்தமாக்கிய வாலிபர்! தற்போது சிறையில் வசிக்கிறார்!

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் வசித்து வரும் மூதாட்டி சரோஜா(80) வீட்டில் 9 ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வருகிறார் ஸ்டீபன். சரோஜாவின் இரண்டு மகள்களும் திருமணமாகி வேறு இடத்திற்கு சென்றுவிட்டதால், ஆதரவற்ற பாட்டிக்கு ஸ்டீபன் உதவிகள் செய்து வந்திருக்கிறார்.

சரோஜா பெயரில் இருந்த 1500 சதுர அடி நிலத்தில் மொத்தம் ஆறு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் 50 லட்சம் மதிப்புடையது. பாட்டிக்கு உதவி செய்கிறேன் சொல்லி, பாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து 4 லட்சம், 6 வீட்டு வாடகை வசூல் 8 லட்சத்தை அபேஸ் செய்திருக்கிறார் ஸ்டீபன். எல்லாவற்றுக்கும் மேலாக, பாட்டியின் வீட்டையே தன்பெயருக்கு மாற்றியிருக்கிறார்.

பாட்டியை ஏமாற்றி வாடகை வீட்டையே சொந்தமாக்கிய வாலிபர்! தற்போது சிறையில் வசிக்கிறார்!

மகன் போல இருந்த எல்லா உதவிகளையும் செய்யும் ஸ்டீபன் சொல்லும் இடத்தில் எல்லாம் பாட்டி கையெழுத்து போட்டதால்தான் இத்தனை மோசடிகளையும் அரங்கேற்றி வந்திருக்கிறார்.

பாட்டி இறந்ததும் வீடு நமக்குத்தான் என்று ஸ்டீபன் போட்டு வைத்த திட்டம் எல்லாம் இப்போது தவிடுபொடியாகிவிட்டது.

பாட்டியை ஏமாற்றி வாடகை வீட்டையே சொந்தமாக்கிய வாலிபர்! தற்போது சிறையில் வசிக்கிறார்!

வருவாய் துறை அதிகாரிகள் பக்கத்து வீட்டை சர்வே எடுத்தபோது, சரோஜா வீட்டையும் சர்வே எடுத்திருக்கிறார்கள். அதிகாரிகள் பாட்டியிடம் விசாரித்துவிட்டால் கதை கந்தலாகிவிடுமோ என்ற அச்சத்தில், தானாகவே முன்வந்து, பாட்டி இந்த வீட்டை தன் பெயரில் எழுதிகொடுத்துவிட்டதாக சொல்லவும், சந்தேகமடைந்த அதிகாரிகள், அக்கம்பக்கத்தில் விசாரித்து, பாட்டியின் மகள்களுக்கு போன் செய்து தகவலை தெரிவிக்க, அவர்கள் வந்து போலீசில் புகார் கொடுக்கவும், போலீஸ் விசாரணையில் எல்லா உண்மைகளையும் ஒப்புக்கொண்ட ஸ்டீபன் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.