பல்லடம் அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை – போலீசார் விசாரணை

 

பல்லடம் அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை – போலீசார் விசாரணை

திருப்பூர்

பல்லடம் அருகே மானாமதுரையை சேர்ந்த இளைஞர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டு, சாலையோரம் உடல் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் – திருப்பூர் சாலையில் உள்ள தெற்கு பாளையம் பிரிவில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஓருவர், கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏடிஎஸ்பி ஸ்ரேயா தலைமையிலான போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்லடம் அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை – போலீசார் விசாரணை

தொடர்ந்து, அந்த இளைஞரின் உடையில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், கொலையான நபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், சடலம் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலை ஓரம் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.