திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை

போரூரில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் சுபஶ்ரீநகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(30). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெங்கடேசன் வீடு உள்புறமாக பூட்டியிருந்ததுள்ளது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் மாங்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வெங்கடேசன் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்னதாக வெங்கடேசன் திருமணம் ஆகாத விரக்தியில், 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதும், தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.