நிலத்தகராறு செய்தவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்ட பெண் ! விஷம் கலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு

 

நிலத்தகராறு செய்தவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்ட பெண் ! விஷம் கலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அண்டை வீட்டாருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற மறுத்த பெண்ணை கொல்வதற்கு விஷம் கலந்த குளிர்பானம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
38 வயதான ஏ.வி.வெங்கடேஷ், என்பவருக்கும் அண்டை வீட்டு பெண்ணான கலாவதி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலத் தகராறு பிரச்சனை இருந்துள்ளது. இந்த பிரச்சனை நீதிமன்றம் கொண்டு செல்லாமல் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அவரை கலாவதி உள்பட 5 பேர் வீட்டிற்கு அழைத்துள்ளனர். இதை அடுத்து வெங்கடேஷ் முக்கிய குற்றவாளி கலாவதியின் வீட்டிற்கு அழைக்கப்பட்டார்.

நிலத்தகராறு செய்தவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்ட பெண் ! விஷம் கலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு
அப்போது அவருக்கு குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை குடித்த வெங்கடேஷ் கடுமையான வயிற்று வலியை உணர்ந்தார். அப்போது அந்த 5 பேரும் வழக்குகளை வாபஸ் பெறுவதாக உறுதி அளித்தால் மருத்துவமனை அழைத்து செல்வதாகவும், இல்லை எனில், உயிரிழக்க நேரிடும் என கூறியதாகவும் தெரிகிறது. பாதிக்கப்பட்ட நபர் வெளியே ஓடிவந்தார. அவர் மல்லேஸ்வரத்தில் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக கொலை சதித்திட்டம் தீட்டியதாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.