பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி- உயிர் பிழைத்துவிடுவார் என்று கல்லை தூக்கிப் போட்ட காதலன்

 

பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி- உயிர் பிழைத்துவிடுவார் என்று கல்லை தூக்கிப் போட்ட காதலன்

கள்ளக்காதலை கண்டித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறார் மனைவி. எங்கே அவர் உயிர் தப்பித்து விடுவாரோ என்று அவர் மேல் பெரும் கல்லை தூக்கி போட்டு கொன்று இருக்கிறார் அப்பெண்ணின் காதலன். பெங்களூரில் பட்டிஹள்ளி பகுதியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி- உயிர் பிழைத்துவிடுவார் என்று கல்லை தூக்கிப் போட்ட காதலன்

பட்டிஹள்ளி பகுதியில் வசித்துவந்த நாராயணப்பா(52)- அன்னபூர்ணா(36) தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 14 வயது மூத்த மகளினாதான் தாய் போலீசில் சிக்கி இருக்கிறார். நாராயணப்பா நீலமங்கலம் தனியார் கம்பெனி ஒன்றில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

பட்டிஹள்ளி பட்டியலில் உள்ள வெங்காய மண்டி ஒன்றில் அன்னபூர்ணா வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது அன்னபூர்ணாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஓவியர் ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறியிருக்கிறது . இவர்களுக்கு இடையே இருந்த உறவை தெரிந்துகொண்ட நாராயணப்பா அன்னபூர்ணாவை கண்டித்திருக்கிறார்.

ஆனாலும் அதன் பின்னரும் தொடர்ந்து ராமகிருஷ்ணனுடன் உறவில் இருந்து வந்திருக்கிறார் அன்னபூர்ணா. இதனால் சண்டை போட்டு பிரச்சனை செய்திருக்கிறார் நாராணப்பா. இதில் ஆத்திரமான அன்னபூர்ணா கணவர் இருந்தால் இனி காதலனுடன் வாழ முடியாது என்று முடிவெடுத்து கணவன் மீது பெட்ரோலை ஊற்றி ஊற்றிக் கொளுத்தி விட்டிருக்கிறார்.

பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி- உயிர் பிழைத்துவிடுவார் என்று கல்லை தூக்கிப் போட்ட காதலன்

அப்போது அவரது காதலன் ராமகிருஷ்ணன் அங்கு இருந்திருக்கிறார். உடல் தீப்பற்றி எரிந்ததும் அலறியடித்துக்கொண்டு அங்கு உள்ள கால்வாயில் விழுந்து தப்பிக்க நினைத்து இருக்கிறார் நாராயணப்பா. எங்கே அவர் தப்பித்து உயிர் பிழைத்து ஓடி விடுவாரோ என்ற அச்சத்தில் அங்கிருந்த பெரிய கல்லொன்று தூக்கி உடல் எரிந்து கொண்டிருந்த அவர் மேல் தூக்கிப் போட்டு இருக்கிறார்.

இந்த தாமதம் இதில் எங்கேயும் ஓட முடியாமல் உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்திருக்கிறார் நாராணப்பா. போலீசார் 3 மகள்கள் இடமும் விசாரித்தபோது 14 வயதான மூத்த மகள் நடந்தவற்றை அப்படியே சொல்லியிருக்கிறார் . இதை எடுத்து அன்னபூர்ணா ராமகிருஷ்ணா வில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.