‘விக்’ கழன்று விழுந்ததால் சிக்கிய மாப்பிள்ளை – மனைவி போலீசில் புகார்!

 

‘விக்’ கழன்று விழுந்ததால் சிக்கிய மாப்பிள்ளை – மனைவி  போலீசில் புகார்!

தலைமுடி போல் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

‘விக்’ கழன்று விழுந்ததால் சிக்கிய மாப்பிள்ளை – மனைவி  போலீசில் புகார்!

திருமணம் என்பது பண்டைய காலம் மாதிரி தற்போது இல்லை. பெற்றோர் பார்க்கும் திருமணம், காதல் திருமணம் என்பதை தாண்டி இன்டர்நெட் வழியாகவும் சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இன்னும் சிலர் திருமணம் செய்து வைக்கும் மையங்களை அணுகி அதன் மூலம் கிடைக்கும் வரனை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற திருமண மையங்களை பயன்படுத்தி சிலர் மோசடியிலும் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகியுள்ளது.

‘விக்’ கழன்று விழுந்ததால் சிக்கிய மாப்பிள்ளை – மனைவி  போலீசில் புகார்!

இந்நிலையில் தலையில் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மீது நடவடிக்கை எடுக்க மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இளம்பெண் ஒருவருக்கும் சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் கடந்த 2015 மேட்ரிமோனி மூலம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகை, ரூ.2 லட்சத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ராஜசேகர் தலையில் முடி இல்லாததால் அவர் விக் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது. ராஜசேகரின் விக் திடீரென கழன்று விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலையில் முடி போல் விக் வைத்து மேட்ரிமோனியில் புகைப்படம் பதிவிட்டு, ராஜசேகர் ஏமாற்றியதாக அவர் தன் புகாரில் தெரிவித்துள்ளார். 50 சவரன் நகைகள் பற்றி கேட்டபோது கணவர் ராஜசேகர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். இளம் பெண் அளித்த புகாரின் பெயரில் ராஜசேகர் அவரது பெற்றோர் ஜெகநாதன் – ஜெகதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.