பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை ஊடகத்தில் உலவ விட்டனர் -உள்ளூர் மக்கள் உதைத்து பிடித்தனர்..

 

பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை ஊடகத்தில் உலவ விட்டனர் -உள்ளூர் மக்கள் உதைத்து பிடித்தனர்..

15 வயது மைனர் சிறுமியை நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட சம்பவம் அனைவரையும் அதிச்சியடைய வைத்துள்ளது

பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை ஊடகத்தில் உலவ விட்டனர் -உள்ளூர் மக்கள் உதைத்து பிடித்தனர்..ஜூன் மாதம் 24 ம் தேதி பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தின் ரஹிகா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பிற்பகல் நேரத்தில் கழிவறைக்கு 15 வயது சிறுமி தனியாக சென்றுள்ளார் .அப்போது அந்த ஊரை சேர்ந்த நான்கு இளைஞர்கள் அந்த சிறுமியை ஒரு ஒதுக்குபுறமான இடத்திற்கு கடத்தி சென்றனர் .
அந்த சிறுமியினை கடத்தி சென்ற நான்கு பேரும் அவரை ஒருவர் மாறி ஒருவர் கற்பழித்தனர் .பிறகு அந்த காட்சியினை வீடியோ படமாகவும் அவர்களின் செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டனர் .

பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை ஊடகத்தில் உலவ விட்டனர் -உள்ளூர் மக்கள் உதைத்து பிடித்தனர்..அதற்கு பிறகு சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டார் .சிலநாள் கழித்து அவர்கள் அந்த பலாத்காரம் செய்த விடீயோவினை சமூக ஊடகத்தினில் வெளியிட்டுள்ளனர் .இந்த வீடியோவினை அந்த ஊரை சேர்ந்த பலர் பார்த்து ,இது பற்றி அந்த பெண்ணிடம் விசாரித்தபோது ,அதற்கு அவர் அந்த இளைஞர்களுக்கு பயந்து வெளியே சொல்லவில்லை என்று கூறியுள்ளார் .இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள் அந்த இளைஞர்கள் மீது போலீசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர் .தப்பி ஓடிய மீதி இரண்டு பேரை தேடி வருகின்றனர் .