உயிருடன் மீன் தொண்டைக்குள் சிக்கியதில் ஒருவர் பலி!

 

உயிருடன் மீன் தொண்டைக்குள் சிக்கியதில் ஒருவர் பலி!

தொண்டையில் உயிருடன் மீன் சிக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிருடன் மீன் தொண்டைக்குள் சிக்கியதில் ஒருவர் பலி!

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி பெரிய கண்மாயில் மீன் பிடிக்கும் போது உயிருடன் மீன் தொண்டைக்குள் சிக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். கண்மாயில் பிடித்த கெளுத்தி மீனை வாயில் கவ்விக்கொண்டு அடுத்த மீனை பிடிக்க முயன்ற இளையராஜா என்பவர் உயிரிழந்தார். கவ்விக் கொண்டிருந்த கெளுத்தி மீன் துள்ளிக் கொண்டு செல்லும் போது தொண்டையில் சிக்கியதால் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது