காதல் வலையில் சிக்கிய சிறுமி குளியல் அறையில் குழந்தை பெற்றெடுத்த அவலம்

 

காதல் வலையில் சிக்கிய சிறுமி குளியல் அறையில் குழந்தை பெற்றெடுத்த அவலம்

சென்னையில் காதல் வலையில் சிக்கி கர்ப்பமடைந்த மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி குளியல் அறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் இருக்கும் பொழுது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பிறந்த 10 நாட்கள் ஆன குழந்தையை வைத்து இருந்த பாலாம்பிகை என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த குழந்தை கல்லூரியில் பயின்று வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை என்பதும் வளர்க்க முடியாததால் தன்னிடம் கொடுத்ததாகவும் அந்த பெண் கூறினார். இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

காதல் வலையில் சிக்கிய சிறுமி குளியல் அறையில் குழந்தை பெற்றெடுத்த அவலம்

விசாரணையில் மிசோரம் மாநிலத்திலிருந்து சென்னை வந்து கல்லூரியில் படித்துவரும் 16 வயது மாணவி காதல் வலையில் சிக்கி கர்ப்பமடைந்துள்ளார். தொடர்ந்து குளியலறையில் குழந்தை பெற்றெடுத்த அந்த மாணவி, பிறந்த 10 நாட்களில் அக்குழந்தையை மற்றொரு பெண்ணிடம் கொடுத்து வளர்க்குமாறு கூறியுள்ளார். குழந்தையை பெண்ணிடமிருந்து மீட்ட காவல்துறையினர், அதனை இந்திய குழந்தைகள் நல சங்கத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.