கஞ்சா கடத்திய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 

கஞ்சா கடத்திய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதான 4 பேரை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி உத்தரவிட்டார்.

கஞ்சா கடத்திய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி திருச்சியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு கஞ்சாவை கடத்திவந்த புகாரில் சோனைமுத்து, கிருஷ்ணமூர்த்தி, பரணிவல்லவன், பண்டியப்பன் ஆகியோரை, வடமதுரை போலீசார் கைதுசெய்து, தேனி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா பரிந்துரையின் பேரில், அவர்கள் 4 பேரையும் தடுப்புக்காவலில் வைக்க, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஞ்சா கடத்திய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது