ஆயுள் தோஷத்தை போக்கும் மூன்றாம் பிறை!

 

ஆயுள் தோஷத்தை போக்கும் மூன்றாம் பிறை!

ஆயுள் தோஷத்தை போக்கும் மூன்றாம் பிறை! தெய்வீக பிறையான மூன்றாம் பிறையில் சந்திரனை தரிசனம் செய்து வணங்கினால் ஆயுள் தோஷத்தை போக்கி ஆயுளை விருத்தியாக்கும். செல்வங்களைச் சேர்க்கும், சந்திரதோஷம், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறையாகும்.

ஆயுள் தோஷத்தை போக்கும் மூன்றாம் பிறை!

அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். இந்த மூன்றாம் பிறையை பார்க்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மூன்றாம் பிறையைத் தான் மகாதேவன் தன் தலையின்
மீது அணிந்திருக்கிறார். சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் “ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!” அல்லது “ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி” என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். மூன்றாம் பிறையை பார்த்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். கண்பார்வை தெளிவாகும். மனக்குழப்பங்கள் நீங்கி மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும்.

ஆயுள் தோஷத்தை போக்கும் மூன்றாம் பிறை!

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறைகளாவது பார்த்தால் முக்தி கிடைக்கும் எனச் சொல்வார்கள். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்கினால் ஆயுள் தோஷத்தைப் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

  • வித்யா ராஜா