பேஸ்புக் நட்பு… திருமண ஆசை… பாலியல் உறவு !-இளம்பெண்ணிடம் பணம், நகையை கறந்த குமரி வாலிபர்

 

பேஸ்புக் நட்பு… திருமண ஆசை… பாலியல் உறவு !-இளம்பெண்ணிடம் பணம், நகையை கறந்த குமரி வாலிபர்

பேஸ்புக் மூலம் இளம்பெண்ணிடம் நட்பாக பழகிய வாலிபர், திருமணம் செய்து கொள்வதாக கூறிய உல்லாசம் அனுபவித்துள்ளார். அதோடு, பணம், நகைகளை ஏமாற்றி பறித்ததோடு, கடைசியில் கழற்றி விட்டதால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.

பேஸ்புக் நட்பு… திருமண ஆசை… பாலியல் உறவு !-இளம்பெண்ணிடம் பணம், நகையை கறந்த குமரி வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் டெய்சி (28). விவாகரத்தான இவர், பேஷன் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேஸ்புக் மூலம் நாகர்கோவில் கட்டையன்விளையைச் சேர்ந்த கேபிள் நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் குமார் (28) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வளர்ந்த நட்பு பின்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது, உன்னை திருமணம் செய்து கொள்வதாக டெய்சியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனால், உல்லாசத்துக்கு சம்மதித்துள்ளார் டெய்சி. திருமணம் என்ற வார்த்தையை பயன்படுத்தி பலமுறை டெய்சியிடம் பாலியல் உறவு வைத்துள்ளார் லோகேஷ் குமார். இந்த நிலையில், கேபிள் தொழிலை விரிவுபடுத்துவதாகவும் அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் டெய்சியிடம் கூறியுள்ளார் லோகேஷ். இதை நம்பிய டெய்சி, 30 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துள்ளார். பின்னர், கார் தொழில் செய்யப் போவதாகக் கூறி அவரிடம் 5 லட்சம் ரூபாய் கறந்துள்ளார். இந்த சூழ்நிலையில், தன்னைத் திருமணம் செய்யும்படி லோகேஷிடம் வலியுறுத்தியுள்ளார் டெய்சி. ஆனால், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கைவிரித்துவிட்டார் லோகேஷ். அதோடு, இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார் லோகேஷ்.

பேஸ்புக் நட்பு… திருமண ஆசை… பாலியல் உறவு !-இளம்பெண்ணிடம் பணம், நகையை கறந்த குமரி வாலிபர்
இதனிடையே, கடந்த 7ஆம் தேதி லோகேஷின் தாய் கீதா குமாரி, தனது குடும்ப நண்பரான அய்யாசாமி, பிரதீப்பை அழைத்துக் கொண்டு, டெய்சியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்கள் டெய்சியை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் டெய்சியின் செல்போனை அவர்கள் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள், அதாவது 8ம் தேதியும், 9ஆம் தேதியும் லோகேஷின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார் டெய்சி. இதையடுத்து, காவல்துறையினர் லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “எனக்கும் அவளுக்கும் எந்த தொடர்பு கிடையாது. அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது” என்ற கூறியுள்ளார் லோகேஷ் குமார். இதையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணனிடம் புகார் அளித்துள்ளார் டெய்சி. இந்த புகாரின் பேரில், லோகேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், லோகேஷ் குமாரின் தாய் கீதா குமாரி, அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.