மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது

 

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது

கோவையில் பள்ளி மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியரை, 9 ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். கோவை குனியமுத்தூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், கோவை ராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது


அதில், தான் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது, திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை பயிற்றுவித்த ஆசிரியர் ஜெய்சங்கர் (39) என்பவர், மாணவிகளின் செல்போன் எண்களுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியதாகவும், இதனையடுத்து அவரது இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பல ஆண்டுகளாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தற்போது போஸ்கோ சட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து, புகார் அளிப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஜெய்சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது