பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தடை… அனுமதித்தால் எங்களை பகவான் மன்னிக்க மாட்டார்.. உச்ச நீதிமன்றம்

 

பூரி ஜெகந்நாதர்  கோயில் ரத யாத்திரைக்கு தடை… அனுமதித்தால் எங்களை பகவான் மன்னிக்க மாட்டார்.. உச்ச நீதிமன்றம்

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள பிரபல வைணவ தலம் பூரி ஜெகந்நாதர் கோயில். இந்த கோயில் மூலவர்களான ஜெகந்நாதர் , பலபத்திரர் மற்றும் சுபத்திரை தனித்தனியாக 3 தேர்களில் ஏறி ரத வீதிகளில் ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டு தோறும் 10 முதல் 12 நாட்கள் நடைபெறும். வரலாற்று சிறப்பு மிக்க ரதயாத்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

பூரி ஜெகந்நாதர்  கோயில் ரத யாத்திரைக்கு தடை… அனுமதித்தால் எங்களை பகவான் மன்னிக்க மாட்டார்.. உச்ச நீதிமன்றம்

இந்த ஆண்டு வரும் 23ம் தேதி முதல் ரத யாத்திரை விழா தொடங்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. இதனால் புரி ஜெகன்நாதர் கோயில் தேர் கட்டும் பணிகளை தொடங்க ஒடிசா அரசு அனுமதி அளித்தது.

பூரி ஜெகந்நாதர்  கோயில் ரத யாத்திரைக்கு தடை… அனுமதித்தால் எங்களை பகவான் மன்னிக்க மாட்டார்.. உச்ச நீதிமன்றம்

இந்த சூழ்நிலையில் பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரை இந்த ஆண்டு அனுமதித்தால் தொற்று நோயான கொரோனா வைரஸ் பேரழிவு பரவலை ஏற்படுத்தும். அதனால் இந்த ஆண்டு ரதயாத்திரைக்கு தடை அல்ல ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றம் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு, பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு இந்தி ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்தது.

பூரி ஜெகந்நாதர்  கோயில் ரத யாத்திரைக்கு தடை… அனுமதித்தால் எங்களை பகவான் மன்னிக்க மாட்டார்.. உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவு பிறப்பிக்கும்போது, ரத யாத்திரை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மக்கள் பெரும் கூட்டத்துக்கு வழிவகுக்கும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் ரத யாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ரத யாத்திரையை அனுமதித்தால் பகவான் ஜெகந்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார் என குறிப்பிட்டார். இதனால் இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடைபெற வாய்ப்பில்லை.