கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராடும் இளம்பெண்

 

கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராடும் இளம்பெண்

மதுரையில் காதல் திருமணம் செய்த தன்னை துரத்திவிட்டு, கணவருக்கு வேறு திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (23), இவர் அதே தெருவில் வசித்து வரும் நாகராஜ் என்பரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராடும் இளம்பெண்

மகாலட்சுமி ஏழ்மையான குடும்பம் என்பதால் அவரை திருமணம் செய்ய நாகராஜ் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு நாகராஜ், மகாலெட்சுமியை திருமணம் செய்துகொண்டு, விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மனமாற்றம் அடைந்ததாக கூறி இருவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வந்த நாகராஜின் தாயார், சிறிது காலத்திற்கு மகாலெட்சுமியை அவரது வீட்டில் தங்க கூறியுள்ளார். இந்நிலையில், நாகராஜூக்கு மீண்டும் வசதியான இடத்தில் பெண் பார்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகாலெட்சுமிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், நாகராஜனை அவரை சந்திக்க விடாமல் அவரது தாய் தடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, கேட்டபோது அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மகாலெட்சுமி புகார் அளித்தார். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நாகராஜை அவரது பெற்றோர் வெளியூரில் மறைத்துவைத்துக் கொண்டு நாடகமாடி வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நாகராஜை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராடும் இளம்பெண்