வீட்டுவாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் குத்திக்கொலை…இருவர் படுகாயம்!

 

வீட்டுவாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் குத்திக்கொலை…இருவர் படுகாயம்!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவருடன் மகன் சதீஷ் மற்றும் மருமகள் சுகன்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் இருந்துள்ளனர். இவர்கள் வீட்டின் மாடியில் நாராயணன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.பெயிண்டர் வேலை செய்யும் நாராயணன் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்ததாகத் தெரிகிறது.

வீட்டுவாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் குத்திக்கொலை…இருவர் படுகாயம்!

கடந்த சனிக்கிழமை நாராயணனிடம் வாடகை பணம் கேட்டுள்ளார் சதீஷ். நாராயணன் தனக்கு வேலை இல்லாததால் வீட்டு வாடகை தர இயலாத சூழலில் உள்ளதாகத் தனது தரப்பு நியாயத்தைக் கூறியுள்ளார். இதில் சதீஷிக்கும் நாராயணனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு சதீஷின் தந்தை சந்திரமோகன், மற்றும் அவரது மனைவி சுகன்யா வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டுக்குள் இருந்த கத்தியை கொண்டு வந்து சதீஷ், சந்திர மோகன் மற்றும் சுகன்யா ஆகிய மூவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வீட்டுவாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் குத்திக்கொலை…இருவர் படுகாயம்!

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த மூவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதீஷ் மற்றும் அவரது தந்தை சந்திரமோகன் ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் . இதைத்தொடர்ந்து தப்பியோடிய குற்றவாளி நாராயணனை சூளைமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.