தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு விடிய விடிய உடல் அருகே ரத்தத்துடன் அமர்ந்திருந்த மகன்

 

தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு விடிய விடிய  உடல் அருகே ரத்தத்துடன் அமர்ந்திருந்த மகன்

தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு விடிய விடிய தாயின் உடல் அருகே ரத்தத்துடன் அமர்ந்திருந்த மகனின் செயல் கும்பகோணம் வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.

தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு விடிய விடிய  உடல் அருகே ரத்தத்துடன் அமர்ந்திருந்த மகன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மாத்திக்கேட்டைச் சேர்ந்தவர் சரஸ்வதி(70). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். சரஸ்வதிக்கு ஏழு குழந்தைகள். ஆறு பேருக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடைசி மகன் பழனி(36)க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .

மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. தாயுடன் பழனியும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.

மனநலம் பாதித்த சிறுவன் அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தாயுடன் பழனி தகராறு செய்திருக்கிறார். வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றிருக்கிறார். அதை தாய் தடுத்திருக்கிறார். இதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பழனி, தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.

தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு விடிய விடிய  உடல் அருகே ரத்தத்துடன் அமர்ந்திருந்த மகன்

பின்னர் ரத்தம் கரையுடன் விடிய விடிய தாயின் உடல் அருகே அமர்ந்து இருக்கிறார். காலையில் நீண்ட நேரம் கதவு திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் பார்த்து உள்ளனர். அப்போது சரஸ்வதி கொலை செய்து கிடந்திருக்கிறார். இதையடுத்து பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரஸ்வதியின் உடலைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

இதற்கிடையில் சகோதரி வீட்டிற்கு சென்ற பழனி, ‘அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை ‘ என்று ரத்தக்கறை கைகளுடன் சொல்ல, அவர் சந்தேகத்தில் பதறி அடித்து வந்து பார்த்து கதறி அழுதிருக்கிறார். பழனியை கைது செய்து போலீசார் விசாரித்த போது தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கூடியதாகும் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த விசாரணையில் கூறியிருக்கிறார்.