தாயின் காதலனை உருட்டுக் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்

 

தாயின் காதலனை உருட்டுக் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்

கடந்த 18ஆம் தேதியன்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி அடுத்த ரயில்வே தண்டவாளத்தில் கிடந்தது . கலிக்கம் பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி இது குறித்து அளித்த புகாரின் பேரில் அம்பாத்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

தாயின் காதலனை உருட்டுக் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்

சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வந்ததில் தண்டவாளத்தில் கிடந்த அந்த சடலம் ஏ. வெள்ளோடு கோம்பையை சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது.

தங்கராஜ் மனைவிக்கு மூத்த கணவருக்கு பிறந்தவர் கிஷோர்(21). இரண்டாவது கணவர் தான் தங்கராஜ் . தாயின் இரண்டாவது கணவரை கிஷோர், வேலை பார்க்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனமாக சுற்றி வந்ததோடு, கிஷோர் சம்பாதித்து வரும் பணத்தையும் பிடிங்கி சென்றுவிடுவதால், கடும் மன உளைச்சலில் இருந்த கிஷோரிடம் அவரை கொலை செய்துவிடலாம் என்று நண்பர்கள் சொல்ல, அவரும் அதன்படியே நண்பர்களுடன் சேர்ந்து உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

அதன்பின் ரயில் தங்கராஜன் உடலின் மீது ஏறியதில் உடல், தலை என இரண்டு இரண்டாக துண்டித்து தண்டவாளத்தில் கிடந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கிஷோரை கைது செய்த போலீசார், கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் ஆறுமுக பாண்டி, அபிஸ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.